சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை வேல்முருகன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது.
பின்னா் வேல்முருகன் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதெல்லாம் பிறகு அறிவிக்கப்படும்’ என்றாா்.