முகப்பு
தமிழ்நாடு

தமிழகம், புதுவை தேர்தல்: காங்கிரஸ் பிரசார மேற்பார்வையாளர்களாக மூவர் நியமனம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசார மேற்பார்வையாளர்களாக மூத்த தலைவர்கள் எம். வீரப்ப மொய்லி, எம்.எம். பல்லம் ராஜு மற்றும் நிதின் ரௌத் ஆகியோரை காங்கிரஸ் நியமித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
வீரப்ப மொய்லி (கோப்புப்படம்)
பகிர்:


தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசார மேற்பார்வையாளர்களாக மூத்த தலைவர்கள் எம். வீரப்ப மொய்லி, எம்.எம். பல்லம் ராஜு மற்றும் நிதின் ரௌத் ஆகியோரை காங்கிரஸ் நியமித்துள்ளது.

இதேபோல் 2021-இல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் பிரசார மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அசாம்: பூபேஷ் பாகெல், முகுல் வாஸ்னிக் மற்றும் ஷகீல் அகமது கான்

கேரளம்: அசோக் கெலாட், லூய்ஸின்ஹோ ஃபலெய்ரோ மற்றும் ஜி. பரமேஸ்வரா

மேற்கு வங்கம்: பி.கே. ஹரிபிரசாத், ஆலம்கிர் ஆலம் மற்றும் விஜய் இந்தர் சிங்ளா

இதுதொடர்பான செய்திக் குறிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.