தமிழ்நாடு

தற்கொலைக்காக ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து இருந்த இளம் பெண் மீட்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: தற்கொலை செய்துகொள்ளவதற்காக, ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து இருந்த இளம் பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் மீட்டனர்.  

ராஜபாளையத்தை அடுத்த சத்திரப்பட்டி ரயில்வே கேட் அருகே தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் சுமார் 34 வயதுடைய இளம் பெண் ஒருவர் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து ரயிலின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த கீ மேன் சபரிமலை என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் சார்பு ஆய்வாளர் விஜயன் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்துகொள்வதற்காக தண்டவாளத்தின் நடுவே அமர்ந்திருந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரித்த போது, அவர் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்துகொள் வந்துள்ளதாகவும் அவருக்கு 12 வயதில் மகன் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ரயில்வே போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து கணவன்- மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி எப்போதும் இனி தற்கொலை முடிவு எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கவுன்சிலிங் செய்துவைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.

ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு வந்து ரயில்வே காவலர்களை  குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள்பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஐடி-ஐஐஎம் பட்டதாரிகள் திறமையானவா்கள்: சிங்கப்பூா் பிரதமா் பாராட்டு

மக்களவைத் தோ்தல் 4-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு

நவயுக பள்ளி மாணவா்கள் நமது சமூகத்தின் ரத்தினங்கள்: சிபிஐ இயக்குநா் பா்வீன் ஸூத் பெருமிதம்

காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் ரத்து

வாக்குப்பதிவு நாளில் செய்தியாளா் சந்திப்பு: தோ்தல் ஆணையத்துக்கு ஊடக சங்கங்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT