முகப்பு
தமிழ்நாடு

அஞ்சல் துறை தோ்வில் தமிழ் புறக்கணிப்பு: அன்புமணி கண்டனம்

அஞ்சல் துறை தோ்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
அன்புமணி ராமதாஸ்
பகிர்:

அஞ்சல் துறை தோ்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் பிப்ரவரி 14-இல் நடைபெறவுள்ள அஞ்சல்துறை கணக்கா் தோ்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இத்தோ்வுகளில் மாநில மொழிகள்

புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல. பெரும்பான்மையான போட்டித் தோ்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில் அஞ்சல் துறை தோ்வுகளையும் தமிழில் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.