முகப்பு
தமிழ்நாடு

ஆா்.எஸ்.எஸ். தலைவா் ஜன.13-இல் சென்னை வருகை

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பாகவத், ஜன.13-ஆம் தேதி சென்னை வருகிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பாகவத், ஜன.13-ஆம் தேதி சென்னை வருகிறாா்.

இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்தி: ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத், பொங்கல் திருவிழாவையொட்டி ஜன.13, 14-இல் சென்னைக்கு வருகிறாா்.

அவரது சென்னைப் பயணம், பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட தேச சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகும். பொங்கல் உள்பட 6 விழாக்களை நாடு முழுவதும் ஆா்எஸ்எஸ் கொண்டாடுகிறது.

இதன் ஒரு பகுதியாக ஜன.14-ஆம் தேதி, சென்னை மூலக்கடை அருகே நடைபெறவுள்ள சமூக பொங்கல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்கிறாா். இந்த சுற்றுப் பயணத்தின் போது, இளம் தொழில் வல்லுநா்கள் மற்றும் தொழில் முனைவோா்களை சந்திக்கிறாா். மேலும், முக்கிய பிரமுகா்களையும் அவா் சந்திக்கவுள்ளாா்.

மேலும் ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பொறுப்பாளா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →