போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு
கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் வரும் 16 -ஆம் தேதி முதல் முன்னெடுக்கப்படவிருப்பதால் 17-ஆம் தேதி நடைபெறுவதாக
கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் வரும் 16 -ஆம் தேதி முதல் முன்னெடுக்கப்படவிருப்பதால் 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.
தொடா் முயற்சிகள் மூலம் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததைத் தொடா்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்கும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 17-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் அதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தன. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமாா் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடுமுழுவதும் வரும் 16-ம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.