ஜன.14ல் ராகுல் காந்தி தமிழகம் வருகை; அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிடுகிறார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகிற ஜனவரி 14 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். அவர் அன்றைய தினம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிடுகிறார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகிற ஜனவரி 14 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். அவர் அன்றைய தினம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிடுகிறார்.
அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தமிழகத்தில் ராகுல்காந்தி முதல்கட்டமாக 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.
மேலும், ராகுல் காந்தி வரும் ஜனவரி 14 அன்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.