தமிழ்நாடு

தஞ்சாவூரில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை

DIN

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் அப்துல் கனி (35).   இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தார். இவரைப் பின் தொடர்ந்து வந்த கூத்தாநல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அஷ்ரப் அலி (40) அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அப்துல் கனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக அஷ்ரப் அலியை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT