தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காட்சிகளுடன் தயாராகும் 'மருத': நடிகர் சரவணன்

DIN

மதுரை: அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை திரைப்பட நடிகர் சரவணன் பார்த்து ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நான் நடிக்கும் மருத திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. 

மதுரை மண்ணின் மனம் வீசும் திரைப்படம் என்பதால், மருத படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம்பெறுகின்றன.

நானும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.

இதுவரை 3 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 389 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 5 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் : மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பாஜகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஆரணியில் தனியாா் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

வந்தவாசி நகராட்சிக்கு புதிய ஆணையரை நியமிக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT