முகப்பு
தமிழ்நாடு

காணும் பொங்கல்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காணும் பொங்கல்  அன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:18 PM
காணும் பொங்கல்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பகிர்:

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காணும் பொங்கல்  அன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். 



ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அண்ணா பூங்கா ,ஏரி பூங்கா, படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடி சீட், தாவரவியல் பூங்கா, சேர்வராயன் கோவில், கரடியூர் வனக் காட்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏராளமாக காணமுடிந்தது. 

சுற்றுலா வாகனங்கள் சீராக செல்ல உதவ கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவிலிருந்து சனிக்கிழமை பகல்  10 மணி வரை  சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →