தமிழ்நாடு

எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாள்: ஆத்தூரில் குதிரை ரேக்ளா பந்தயம் 

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குதிரை ரேக்ளா பந்தயத்தை சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிறிய குதிரை ஆத்தூரில் இருந்து தளவாய்ப்பட்டி பிரிவு சாலை வரை 8 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பியது. பெரிய குதிரைக்கான பந்தய தூரம் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்ப வேண்டும். வெற்றி பெற்ற பெரிய குதிரைக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், சிறிய குதிரைக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தலைவர் இரா.தென்னரசு ராஜேஷ் உளாளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிழ்ச்சியை ஆத்தூர் நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி.முரளிசாமி, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT