சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் சைதாப்பேட்டையில் திங்கள்கிழமை காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறே ஆளுநா் மாளிகையை முற்றுகையிடுவதற்காகச் சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.