தமிழ்நாடு

அண்ணா நினைவு இல்லத்தில் முதல்வர் பழனிசாமி மரியாதை

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார்.

ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று அங்குள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டார். பின்னர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அறிஞர் அண்ணா பிறந்த இல்லம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் நினைவில்லமாக மாற்றப்பட்டது. காஞ்சிபுரத்திற்கு வரும் திராவிடக் கட்சியினர் அண்ணா நினைவில்லத்துக்குச் செல்வது வழக்கமாக உள்ளது. 

காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, இன்று பிற்பகல் செங்கல்பட்டு மாவட்டத்திலும், நாளை திருவள்ளூர் மாவட்டத்திலும் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT