தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 569 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 569 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சுகாதாரத் துறையின் தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 569 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,34,740 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 642 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,17,520 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 7 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,316 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் இன்னும் 4,904 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT