முகப்பு
உலகம்

ஈரானில் இன்றிரவு என்ன நடக்கப் போகிறது? அமெரிக்க துணை அதிபர் பகிர்ந்த தகவல்!

ஈரானிடமிருந்து இரவு 8 மணிக்குள்(அமெரிக்க நேரப்படி) பதில் வராவிட்டால்

Updated On : 7 ஏப்ரல் 2026, 8:41 pm IST
ஹங்கேரியில் வான்ஸ் - AP
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் வரும் புதன்கிழமை(ஏப். 8) அதிகாலை 5.30 மணிக்குள் (இந்திய நேரப்படி) திறக்க தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று பகிரங்க எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, “இன்றிரவு ஒட்டுமொத்த சமுதாயமும் அழியப்போகிறது; அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது” என டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதளப் பக்கத்தில் இன்று (ஏப். 7) பதிவிட்டு ஈரானுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், ஹங்கேரி சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ், தலைநகர் புதாபெஸ்ட் நகரில் பேசியதாவது, “இன்றிரவு 8 மணிக்குள் (அமெரிக்க நேரப்படி) ஈரானால் ஒரு முடிவை எடுக்க இயலும் என்று நாங்கள் நம்புகிறோம்.எங்களிடம் சில கருவிகள் (ஆயுதங்கள்) பட்டியலில் உள்ளன. அவற்றை நாங்கள் இதுவரை பயன்படுத்த முடிவெடுக்கவில்லை.

Advertisement

Advertisement

அவற்றை பயன்படுத்த அதிபர் டிரம்ப் தீர்மானம் எடுக்கலாம்! ஒருவேளை ஈரானியர்கள் தங்களது இதே நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் டிரம்ப் அந்தக் கருவிகளைப் பயன்படுத்த முடிவெடுப்பார்.

நாங்கள் கார்க் தீவில் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறோம். ஈரானியர்கள் ஒரு முன்மொழிவை ஏற்று முடிவெடுக்கும் வரை, எந்தவொரு எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளையும் குறிவைக்க மாட்டோம். ” என்றார்.

summary

Vice President of the US, JD Vance says, "We hope that Iran can make a decision by 8 PM tonight”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.