தமிழ்நாடு

வெங்கல்: கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகளை ஊராட்சிமன்ற தலைவர் துவக்கி வைத்தார்

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு வெங்கல் ஊராட்சிமன்ற சார்பில் மாபெரும் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகளை ஊராட்சிமன்ற தலைவர் சுகந்திராணி லிங்கன் துவக்கி வைத்தார்.

72ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர்  மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் மற்றும் கைபந்து போட்டிகள் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் வெங்கல் கிராமத்தில் உள்ள 10 அணிகள் பங்கேற்றனர். இதில் 10 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வெங்கல் ஊராட்சிமன்ற தலைவர் சுகந்திராணி லிங்கன், கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி இதில் கலந்துகொண்ட 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து டாஸ்க் போட்டு விளையாட்டை துவக்கி வைத்தார் இதில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கணபதி மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் உமாநாத், வழக்கறிஞர் வெங்கல் ரஜனி ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT