சென்னையில் கரோனா சிகிச்சையில் 1,603 பேர்: மண்டலவாரியாக விவரம்
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,603 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,603 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. தொடர்ந்து, வியாழக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இதுவரை 2,30,675 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 2,24,980 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 1,603 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.