தில்லியில் புதிதாக 183 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 183 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 183 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 183 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,34,956 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 290 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 8 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 6,22,671 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 10,849 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 1,436 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement