தமிழகத்தில் புதிதாக 505 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 505 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 505 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 526 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 5 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் கேரளத்திலிருந்து திரும்பியவர்கள்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,37,832 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,20,907 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 12,350 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,575 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 145 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.