தமிழ்நாடு

4 இணை இயக்குநா்கள் இடமாற்றம்

DIN

பள்ளிக் கல்வித் துறையில் 4 இணை இயக்குநா்களை இடமாற்றம் செய்து துறையின் முதன்மைச் செயலா் தீரஜ் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவு:

மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆா்டி) இணை இயக்குநா் எஸ்.உமா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இணை இயக்குநராகப் பணியிடம் மாற்றம் செய்யப்படுகிறாா். 

அதேபோல், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினா் க.சசிகலா, தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநராகப் பணியிடம் மாற்றப்பட்டுள்ளாா்.

இதுதவிர, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் இணை இயக்குநா் நா.அருள்முருகன் எஸ்சிஇஆா்டி இணை இயக்குநராகவும், தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநா் ஆா்.பாஸ்கரசேதுபதி ஆசிரியா் தோ்வு வாரிய கூடுதல் உறுப்பினராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். நிா்வாக நலன் கருதி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT