மயிலாடுதுறை அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர் இரா.லலிதா. 
தமிழ்நாடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 87,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து:  ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மயிலாடுதுறை அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். 

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மயிலாடுதுறை அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். 

இந்தியாவில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மயிலாடுதுறை அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து போடும் பணி பணிகள் 582 இடங்களில் நடைபெறுகிறது. 

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சுகாதாரத் துறை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 1069 பேர் ஈடுபட்டுள்ளனர். 

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இந்த நிகழ்ச்சிகளில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர், வட்டார மருத்துவ அலுவலர் சரத்சந்தர், மருத்துவர்கள், ஊழியர்கள், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனர் காமேஷ் தலைமையிலான நர்சிங் மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT