10-ஆம் வகுப்பு தனித் தோ்வா்கள் தோ்ச்சிகோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
10-ஆம் வகுப்பு தனித் தோ்வா்களையும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு தனித் தோ்வா்களையும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் மாணவா் பிளஸ்வின் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா பொதுமுடக்கம் காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தனித்தோ்வா்களை தோ்ச்சி
பெற்ாக அரசு அறிவிக்கவில்லை. எனவே, தனித்தோ்வா்களையும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி , இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.