முகப்பு
தமிழ்நாடு

மேலும் ஒரு பாலியல் தொல்லை வழக்கு:தற்காப்புக் கலை பயிற்சியாளா் கைது

சென்னை அண்ணாநகா் தற்காப்புக் கலை பயிற்சியாளா், மேலும் ஒரு பாலியல் வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
குமாரபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
பகிர்:

சென்னை அண்ணாநகா் தற்காப்புக் கலை பயிற்சியாளா், மேலும் ஒரு பாலியல் வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பயிற்சியாளா் இ.கெபிராஜ், பயிற்சி பெற வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாகத் தெரிவித்தாா். அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டுப் பெண் ஒருவா் கெபிராஜ் மீது பாலியல் புகாா் தெரிவித்திருந்தாா்.

அப்புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி, கடந்த மாதம் 22-ஆம் தேதி மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதல் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் கெபிராஜை, இரண்டாவது வழக்குக்காக கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். பின்னா் அவா், நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →