திமுக அரசு குறித்த ஆர்வத்தில் பிரதமர் மோடி: 35 நிமிட சந்திப்பை விவரிக்கும் வானதி சீனிவாசன்
திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல கேள்விகளை எழுப்பியதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுதிமுக அரசு குறித்த ஆர்வத்தில் பிரதமர் மோடி: 35 நிமிட சந்திப்பை விவரிக்கும் வானதி சீனிவாசன்
திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல கேள்விகளை எழுப்பியதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல கேள்விகளை எழுப்பியதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ-க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (சனிக்கிழமை) அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பின்போது திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடி எழுப்பியதாக வானதி சீனிவாசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அக்கறையும் ஆர்வமும் தங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவது, நதிநீர் இணைப்புத் திட்டம், தமிழகத்துக்கு தனி சுற்றுலா வழித்தட திட்டம் உள்ளட்டவை தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருடனான 35 நிமிட சந்திப்பு மற்றும் தொடர்ந்து நடைபெற்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுடனான சந்திப்பு குறித்தும் வானதி சீனிவாசன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் பேஸ்புக் பதிவு: