இன்று தில்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு தில்லி செல்கிறார்.
காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு தில்லி செல்கிறார்.
தில்லி செல்லும அவர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவ்த்தை சந்தித்து இதுதொடர்பாக நாளை ஆலோசானை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் மேக்கேதாட்டு அணை விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கேரளம், ஆந்திரம் மாநிலங்களுடன் நதிநீர் விவகாரங்களும் ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.