தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 3,039 பேருக்கு கரோனா; 69 பேர் பலி

தமிழகத்தில் இன்று மேலும் 3,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 3,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,039 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 349 பேருக்கும், ஈரோட்டில் 230 பேருக்கும், சேலத்தில் 191 பேருக்கும், தஞ்சாவூரில் 179 பேருக்கும், திருப்பூரில் 176 பேருக்கும், சென்னையில் 180 பேருக்கும், பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,13,098 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 69 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 33,322ஆக உயர்ந்துள்ளது. மற்றொரு புறம் நோய்த் தொற்றிலிருந்து இன்று 3,411 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24,46,552ஆக உயர்ந்துள்ளது. 
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 33,224 போ் உள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 1,51,631 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT