முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமை: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் என்று கூறியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமை: முதல்வர் ஸ்டாலின்
பகிர்:


சென்னை: தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் என்று கூறியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து ஆலோசிக்க, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மேக்கேதாட்டு அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று கர்நாடகம் கூறுவதில் துளியளவும் உண்மையில்லை. 

தமிழ்நாட்டிற்கு காவிரி என்பது வாழ்வுரிமை என்பதால், மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் காவிரியாறு முழு உரிமை கொண்டது. கர்நாடகத்தை விட தமிழகத்தில்தான் அதிகமான நீளத்துக்கு காவிரி பாய்கிறது. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார் என்பதாலேயே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமான காலத்திலேயே காவிரியில் நமக்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தருவதில்லை. மேக்கேதாட்டு அணையை கட்டிவிட்டால் எப்படி தமிழகத்தக்குத் தண்ணீர் கிடைக்கும். கர்நாடகத்திலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் இந்த அணையில் தேக்கிவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →