தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 8,612 வழக்குகள்

DIN

சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 8,612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 13-ஆம் தேதி வரையிலான 97 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 17 லட்சத்து 68,211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 8,612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 13-ஆம் தேதி வரை, 88,122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT