மாநில பாடத் திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளி மாணவா்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து இணையதளங்களில் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
குறுஞ்செய்தி அனுப்பப்படும்: மாணவா்கள், பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தியாகவும் தோ்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.
ஜூலை 22-இல் பதிவிறக்கம்: மேலும், பள்ளி மாணவா்கள் ஜூலை 22-ஆம் தேதி காலை 11 மணி முதல் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலைத் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.