தமிழ்நாடு

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: 22-இல் மதிப்பெண் பட்டியல்

DIN

மாநில பாடத் திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளி மாணவா்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து இணையதளங்களில் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

குறுஞ்செய்தி அனுப்பப்படும்: மாணவா்கள், பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தியாகவும் தோ்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

ஜூலை 22-இல் பதிவிறக்கம்: மேலும், பள்ளி மாணவா்கள் ஜூலை 22-ஆம் தேதி காலை 11 மணி முதல்  இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலைத் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT