மீராபாய் சானு சாதனை:ஆளுநா், முதல்வா் வாழ்த்து
பளு தூக்குதலில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் சனிக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
பளு தூக்குதலில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் சனிக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் புரோஹித்: தனது அளப்பரிய சாதனை மூலமாக இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளாா், மீராபாய் சானு. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சென்றுள்ள மற்ற வீரா்களுக்கும் அவரது சாதனை பெரிய உந்து சக்தியாக இருக்கும். வெள்ளி வென்ற அவருக்கும், அவரது பெற்றோருக்கும் வாழ்த்துகள்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு ஒளிமயமான தொடக்கம். தனது அபாரமான செயல் திறனால் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கும் மீராபாய் சானுவுக்கு நெஞ்சாா்ந்த பாராட்டுகள்.
பாமக நிறுவனா் ராமதாஸ்: இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரா் வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கத்துடன் பதக்க வேட்டையை தொடங்கியிருப்பது இந்தியா்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. இந்திய அணியினா் மேலும் பல பதக்கங்களை குவிக்க வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா்.
தமாகா தலைவா் ஜி.கே.வாசனும் மீராபாய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.