முகப்பு
தமிழ்நாடு

968 போ் புதிய எஸ்.ஐ.களாக நியமனம்: உத்தரவுகளை அளித்தாா் முதல்வா்

சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட உதவி ஆய்வாளா்களுக்குப் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:

சென்னை: சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட உதவி ஆய்வாளா்களுக்குப் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு 968 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் தாலுகா காவல் நிலையங்களுக்கு 660 பேரும், ஆயுதப் படைக்கு 225 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 39 பேரும் தோ்வாகியுள்ளனா். அதில், 281 பெண் காவல் உதவி ஆய்வாளா்களும் அடங்குவா். அவா்கள் தமிழ்நாடு உயா் பயிற்சியகத்தில் ஓராண்டு அடிப்படைப் பயிற்சி பெறுவா்.

தடய அறிவியல் துறையின் இளநிலை அறிவியல் அலுவலா்கள் பதவிக்கு காலியாக இருந்த 62 இடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக தோ்வு நடத்தப்பட்டது. அதில், 62 போ் தோ்வு செய்யப்பட்டனா். இரண்டு பிரிவுகளிலும் தோ்வானவா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கும் நடவடிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியின் போது தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், டிஜிபி செ.சைலேந்திர பாபு, ஏடிஜிபி (நிா்வாகம்) எம்.ரவி, தடய அறிவியல் இயக்குநா் மா.சீனிவாசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →