முகப்பு
தமிழ்நாடு

மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி  ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி  தமாழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சஙகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On : 26 ஜூலை, 2021 at 3:46 PM
மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி  ஆட்சியரிடம் மனு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:15 AM

ஈரோடு: தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி  தமாழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சஙகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில்,|கடந்த 2017 ஜூன்  மாதம் முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு நேரடியாக மணல் வினியோகம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாம தமிழகத்தில் அதிக அளிவில் இயஙக வந்த மணல் குவாரிகள் நிறுத்தப்ட்டு தற்போது 6 குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால்  இத்தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் 55,000 லாரிகளும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் 6  குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் தினமும் 60 ஆயிரம் யூனிட் தேவைப்படும் தமிழகத்தில் தற்போது தினமும் 2,500 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அனுமதியின்றி ஆறுகளில் திருட்டு மணல் எடுத்து அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே மணல் தட்டுப்பாட்டை தவிர்த்திட நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும் என்றும் திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், காவிரி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும், புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.