வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு ஒதுக்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வன்னியர்கள் 10.5 சதவிகிதம், சீர்மரபினர் 7 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவிகிதம் சிறப்பு உள் ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26-ம் தேதி முதல் சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சட்ட வல்லுநர், டிஎன்பிஎஸ்சியுடன் கலந்தாலோசித்து சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்தலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு முதல் புதிய சிறப்பு ஒதுக்கீடு முறையில் தொழில்கல்வி உள்பட அனைத்து கல்வியிலும் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.