அண்ணா பல்கலைக்கழகம் 
தமிழ்நாடு

பொறியியல் கல்லூரிகளில் ஆக.18 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரி செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

DIN

நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரி செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களில் 41,363 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கலந்தாய்விற்கான ரேண்டம் எண்களை ஆகஸ்ட் 25ம் தேதியும் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 4ம் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்றும் கூறியுள்ளது. 

இரண்டு, மூன்று, நான்காம் ஆண்டு பொறியில் படிக்கும் மாணவர்களுக்கு வருகிறார் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் நடப்பு செமஸ்டரின் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும் டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் டிசம்பர் 13ம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT