முகப்பு
தமிழ்நாடு

மாநிலங்களுக்கு கரோனா அவசர கால நிதி 15% விடுவிப்பு

சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொள்ளும்விதமாக மாநிலங்களுக்கு கரோனா அவசரகால நிதியில் 15 சதவீதத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொள்ளும்விதமாக மாநிலங்களுக்கு கரோனா அவசரகால நிதியில் 15 சதவீதத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கரோனா அவசரகால நிதியாக ரூ.1,827.8 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க நிா்ணயித்துள்ள ரூ.12,185 கோடியில் 15 சதவீதமாகும்.

மத்திய அரசின் இந்த நிவாரண தொகுப்பு நாடு முழுவதும் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.

விடுவிக்கப்பட்ட கரோனா அவசரகால நிதியில் அதிகபட்சமாக ரூ.281.98 கோடி உத்தர பிரதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பிகாருக்கு ரூ.154 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.132 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.131 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது என மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →