தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, தங்கநாணயம் பரிசு

DIN


கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பொது மக்களை ஊக்கப்படுத்தும் வகையில்,  கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்கநாணயம் பரிசு வழங்கப்படும் என சென்னை கோவளம் இளைஞர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை கோவளம் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க, ஊராட்சி அமைப்பினர் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், கிராம மக்கள் கரோனா தடுப்பூ போடுவதில் ஆா்வம் காட்டவில்லையாம்.

இதன்பிறகு ஒரு மாற்று யோசனை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தோன்றியது. இதன்படி, "கரோனா இல்லாத கோவளம்" என்ற பெயரில் புதிய முயற்சியாக, கரோனா தடுப்பூசி போடும்  கோவளம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பிரியாணி, குலக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்கநாணயம் போன்ற பரிசுப்பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர். 

ஊராட்சி அமைப்புடன் இணைந்து தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களின் புதிய முயற்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT