முகப்பு
தமிழ்நாடு

கரோனா பாதிப்பு குறைகிறது: சுகாதாரத் துறையினருடன் முதல்வர் ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர், சுகாதாரத்துறைச் அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். 

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கினால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்றும் விரைவில் ஊரடங்கிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். எனவே வரும் வாரத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்னென்ன தளர்வுகள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.