கரோனா பரவல் குறைகிறது: கையிருப்பில் 6.5 லட்சம் தடுப்பூசிகள்: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கரோனா தொற்று தற்போது அதே வேகத்தில் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கரோனா தொற்று தற்போது அதே வேகத்தில் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பாதிப்பில் இருந்து மீளலாம் என மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும்.
தமிழகத்தில் தற்போது 6.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஜீன் மாதத்திற்கான 42 லட்சம் தடுப்பூசிகளில் நேற்று சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
இதனால், இன்னும் 4 நாள்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பதாகவும் சுப்பிரமணியன் தெரிவித்தார்.