தமிழ்நாடு

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

DIN


சென்னை: தமிழகத்தில் சில தளர்வுகளுடன்  மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

ஊரடங்கு வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

செயல்பட அனுமதிப்பட்டுள்ள நிறுவனங்கள்: 

* தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 ம ணி வரை செயல்பட அனுமதி

* காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட் அனுமதி.

* மீன் சந்தகளை மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி.

* இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி. 

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.

* அனைத்து அளுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படஅனுமதி. 

* சார் பதிவாளர் அளுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். 

* மின் பணியாளர் பிளம்பர்கள், கணினி மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஆ-பதிவுடன் பணிபுரிய அனுமதி.

* மின் பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. 

* மிதிவண்டி மற்றும் இருசக்ர வாகனங்கள் பழுதி நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

* ஹார்டுவேர் கடைகள் செயல்பட அனுமதி. 

* வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி செயல்பட அனுமதி. 

* கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுபொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி.

* வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) செயல்பட அனுமதி. 

* வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி. மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று நபர்களும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பேர் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இ-பாஸ்களுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளவை:

* கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  தொற்று குறைவான பகுதிகளில் மளிகை, காய்கறிக் கடைகள் காலை 5 மணி முதல் மாலை மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

* நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

* கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கள், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்பவதற்காக மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

* நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்களை வாங்குமாறும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT