ஓவியர் இளையராஜா கரோனாவுக்கு பலி
கரோனா தொற்று காரணமாக ஓவியர் இளையராஜா நேற்று மரணமடைந்தார்.
கரோனா தொற்று காரணமாக ஓவியர் இளையராஜா நேற்று மரணமடைந்தார்.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓவியர் இளையராஜா(43). இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்படவே சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் நேற்று நள்ளிரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.