சுருளி அருவியில் கரோனா பொதுமுடக்கத்தை மீறி திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி அறிவிப்பு செய்த வட்டார அலுவலர். 
தமிழ்நாடு

சுருளி அருவியில் திறந்த கடைகளை அடைத்த  அதிகாரிகள்!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் கரோனா பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளை வட்டார அலுவலர் எச்சரித்து கடைகளை அடைக்கச் செய்தனர்.

DIN


கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் கரோனா பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளை வட்டார அலுவலர் எச்சரித்து கடைகளை அடைக்கச் செய்தனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுற்றுலாத்தலமான சுருளி அருவி. இங்கு பொதுமுடக்க தளர்வை முன்னிட்டு சாலையோர கடைகள், உணவு விடுதிகள் திறக்கப்பட்டது.

சுற்றுலாத்தலங்கள் செயல்பட தடை என்பதால் கடைகளை திறக்க அனுமதி இல்லை.  ஆனால் சுருளி அருவியில் தேநீர் மற்றும் உணவகங்கள் திறந்து செயல்பட்டது பற்றிய புகார் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றது.

 மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன் தண்டபாணி ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன் உள்ளிட்டோர்  சுருளி அருவி வளாகத்துக்கு வந்தனர்.

 திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி அறிவிப்பு செய்தனர், மேலும் தடையை மீறி கடைகள் செயல்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT