தமிழ்நாடு

புதுச்சேரியில் குறையும் கரோனா தொற்று: ஒரே நாளில் 442 பேருக்கு தொற்று 9  பேர் உயிரிழப்பு

DIN

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 321 பேர், காரைக்காலில் 97 பேர், மாகேவில் 10 பேர், ஏனாமில் 4 பேர் என புதியதாக 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,12,126 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் புதுச்சேரியில் 7 நபர்கள், காரைக்காலில் 2 நபர்கள் என, கடந்த 24 மணி நேரத்தில் 9 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களிம் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,677 -ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 5,715 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று சிகிச்சை பெற்று 844 வீடு திரும்பியதால், இதுவரை மொத்தம் 1,04,7040 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆக்ஜிசன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகள் பெருமளவில் காலியாக உள்ளது என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT