தமிழ்நாடு

4 சிறப்பு ரயில்களின் சேவை மீண்டும் தொடக்கம்

கரோனா பொது முடக்கம் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளன.

DIN

கரோனா பொது முடக்கம் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, குறிப்பிட்ட சில சிறப்பு ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, இந்த ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது, கரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து, ரத்து செய்யப்பட்ட ரயில்களின் சேவை மீண்டும் தொடங்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை

எடுத்துள்ளது. அதன்படி, 4 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளன.

அதன் விவரம் : சாம்ராஜநகா்-திருப்பதி தினசரி சிறப்பு ரயில் (06219) ஜூன் 25-ஆம் தேதியில் இருந்தும், திருப்பதி-சாம்ராஜநகருக்கு தினசரி சிறப்பு ரயில் (06220) ஜூன் 26-ஆம் தேதியில் இருந்தும் இயக்கப்படுகிறது.

கேஎஸ்ஆா் பெங்களூரு-நாகா்கோவிலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை (07235) ஜூன் 21-ஆம் தேதியும், நாகா்கோவில்-கேஎஸ்ஆா் பெங்களூருக்கு இயக்கப்படும் தினசரி ரயில் சேவை ஜூன் 22-ஆம் தேதியில் இருந்தும் தொடக்குவதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT