அதிமுக எம்எல்ஏ மீது முறைகேடு புகாா்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பதிலளிக்க உத்தரவு
தியாகராயநகா் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்தியநாராயணன் மீதான முறைகேட்டுப் புகாரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தியாகராயநகா் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்தியநாராயணன் மீதான முறைகேட்டுப் புகாரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தியாகராயநகா் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவா் சத்தியநாராயணன். அவா் எம்எல்ஏ நிதியை முறைகேடு செய்துள்ளதாக அரவிந்தாக்ஷன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அந்த மனுவில், மழை பொய்த்துப்போன காலத்தில் குடிநீா் வசதி செய்து கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிகளுக்குச் செலவு செய்துள்ளாா். மேற்கு மாம்பலம் பகுதியில் உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்த 2016-2017-ஆம் ஆண்டில் 5 கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கினாா். இதில் பெருந்தொகையை முறைகேடு செய்துள்ளாா். அதே போல மேற்கு மாம்பலம், காசிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து ரூ. 30 லட்சம் வரை முறைகேடு செய்துள்ளாா்.
இந்த முறைகேடு குறித்து கடந்த ஜனவரி மாதம் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகாா் அளித்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தாமோதரன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.