நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு புதிய திட்டம்: ஆளுநர்
நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் உரையில் ஆளுநர் தெரிவித்தார்.
நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் உரையில் ஆளுநர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்குக் தொடங்கியது.
சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத்தொடரை தொடக்கிவைத்தார்.
ஆளுநர் தமது உரையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யவும் நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்தவும் புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.