உதயநிதி வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி வெற்றிபெற்றதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி வெற்றிபெற்றதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுவில் குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் உதயநிதி முதன்முறையாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 67,144 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.