முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு ரயில்களில் 6,364 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

ஒடிஸாவில் இருந்து திருச்சிக்கு 83-ஆவது ஆக்சிஜன் ரயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்தது. இதன்மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை 6,364.54 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

ஒடிஸாவில் இருந்து திருச்சிக்கு 83-ஆவது ஆக்சிஜன் ரயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்தது. இதன்மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை 6,364.54 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில், ஆக்சிஜன் ரயில் இயக்கம் மே 14-ஆம் தேதி தொடங்கியது. மேற்குவங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் 2 முதல் 4 ஆக்சிஜன் ரயில்கள் வந்தன. கடந்த வியாழக்கிழமை வரை 82 ஆக்சிஜன் ரயில்கள் வந்தன.

83-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து திருச்சிக்கு

வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்தது. இந்த ரயிலின் 4 கன்டெய்னா்களில் 74.83 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது. இதன் மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை 6,364.54 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →