கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாராயணசாமி!
புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
புதுச்சேரியில் முன் களப்பணியாளர்களைத் தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில், புதன்கிழமை முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி மற்றும் மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.
கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர். சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.