முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு: மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் ரத்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த ஆறாம் கட்ட தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
ஸ்டாலின்
பகிர்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த ஆறாம் கட்ட தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசாரத்தில் அனைத்து மாவட்ட மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும் வருகிறார். 

அந்த வகையில், வருகிற மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லவிருந்தார்.

தற்போது தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும், திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுவதால் மு.க.ஸ்டாலினின் ஆறாம் கட்ட தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு, பிரசாரங்கள் தொடரும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் திமுக இன்று வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →