முகப்பு
காந்தி வேடமணிந்து மனுத் தாக்கல் செய்த பொறியாளர்!
தமிழ்நாடு

நாமக்கல் தொகுதியில் காந்தி வேடமணிந்து மனுத் தாக்கல் செய்த பொறியாளர்

நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மென் பொறியாளர் ஒருவர் காந்தி வேடம் அணிந்து வந்து மனுத் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு

நாமக்கல் தொகுதியில் காந்தி வேடமணிந்து மனுத் தாக்கல் செய்த பொறியாளர்

நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மென் பொறியாளர் ஒருவர் காந்தி வேடம் அணிந்து வந்து மனுத் தாக்கல் செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
காந்தி வேடமணிந்து மனுத் தாக்கல் செய்த பொறியாளர்!
பகிர்:

நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மென் பொறியாளர் ஒருவர் காந்தி வேடம் அணிந்து வந்து மனுத் தாக்கல் செய்தார்.

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டி. ரமேஷ் (40). இவர் மென் பொறியாளராக பணியாற்றி தற்போது காந்திய சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு 968 வாக்குகள் பெற்றார். 

அண்மையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் அனைத்து  கல்லூரி மாணவர்களுக்கும் ரூ.4 லட்சம் வரை கட்டாய கடன் வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை செல்லப்பம்பட்டியிலிருந்து நாமக்கல் வந்தவர் குளக்கரை திடலில் காந்தி பேசிய மேடை அருகில் தனது வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். 

தொடர்ந்து சைக்கிளில் நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் மு.கோட்டைக் குமாரிடம் நாமக்கல் தொகுதியில் போட்டியிடத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

மகாத்மா காந்தி பேசிய மேடை முன்பாக வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்ற சுயேச்சை வேட்பாளர் தி.சுரேஷ்

முழு கட்டுரையைப் படிக்க →